பள்ளி வாகன புதிய விதிகள் திருப்தி: உயர்நீதிமன்றம் !

Monday, September 3, 2012

சென்னை

பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

பள்ளி மாணவி ஸ்ருதி உயிரிழந்ததது தொடர்பாக உயர்நீதிமன்றம் பள்ளி வாகனங்கள் தொடர்பாக புதிய விதிகளை உருவாக்க உத்தரவிட்டது,
புதிய விதிகளை உருவாக்கி அதன் அறிக்கையை இன்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

பள்ளி வாகனங்களை வேறு பயன்பாட்டிற்க்கு பயன்படுத்தகூடாது என்றும் ஒட்டுனருக்கு 5 வருடம் அனுபவம் இருக்கவேண்டும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் அமைக்கப்பட வேண்டும், பள்ளி வாகனங்களை, வேறு பணிளுக்கு பயன்படுத்தக் கூடாது, பள்ளி வாகனத்தில் கண்டிப்பாக உதவியாளர் இருக்க வேண்டும் பள்ளி வாகனங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழு இருக்க வேண்டும் உள்ளிட்ட 11 விதிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன.புதிய விதிகள் தங்களுக்கு திருப்தி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.