நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு : சிஏஜி தகவல்!

Friday, August 17, 2012

புதுதில்லி:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

மின்சாரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, விமான நிலையத்தை தனியார்மயமாக்கியது உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி வந்த கணக்கு தணிக்கை அதிகாரியின் 3 அறிக்கைகள் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அறிக்கையில் 2004-2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் மட்டும் ரூ.186 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிலக்கரி சுரங்கத்தை ரிலையன்சுக்கு ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. அதனாலும் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏல முறையை பின்பற்றாமல் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்று சிஏஜி கூறியுள்ளது.